என்
இதயத்தில்
நீ
இருந்ததற்கு
உன்
நினைவின் சுவடுகளே
மௌன சாட்சி!
நீர் நிறை விழிகளால்
என்
நினைவுத்திரையை
நித்தமும் அழித்தாலும்
நீங்காத ஓவியம்
நின் உருவம்.
ஒரு காதலனாய்
நான் தோற்ற போதும்
என்
காதலை
ஜெயிக்கவைத்த
ஒரு சந்தோஷம்
தேடி வரும்
அடுத்த ஜென்மத்திலாவது
உனை
அணைத்துக்கொள்ள !
வானில் பறப்பதற்கு
வகுப்பெடுக்க
வல்லூறை நியமித்ததால்
வாழ்விழந்த
புறா