இந்த முறை vacation tripஐ விரிவாக்கம் செய்து நாங்கள் Manaali மற்றும்
Shimla சென்று வந்தோம். இதுவரை நாங்கள் God’s own country, Coorg மற்றும்
Goa மட்டுமே சென்றிருந்தோம். So இது extension of our horizons தான். Manaali
adventures மேற்கொள்ளக்கூடிய ஒரு அழகானமலைப்பிரதேசம்.
அழகான பூமி, அமைதியான மக்கள்,அச்சம்தரும் குளிர், ஆர்ப்பரிக்கும்
நீரோடைகள், ஆகாயம்தொடும் பனிமலைகள் ஆரவார விளையாட்டுக்கள்
என ஆனந்தத்திற்க்கு அளவேயில்லா பூமி அது. சென்னை, புதுடெல்லி சண்டிகர்
என விமானத்தில் சென்று அங்கிருந்து கார் மூலம் மணாலி சென்றோம்.
நாங்கள் club Mahindra member என்பதால் travel desk மூலம் கார் arrange
செய்திருந்தோம். மணீஷ் என்ற driver வந்திருந்தார். அவர் ஒரு ராஜபுத்ர இளைஞர்.
மிக மிக பணிவாக இருந்தார். என் மனைவி இந்தி படிப்பார்.
நான் ஓட்டை இந்தி பேசுவேன்.so சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் என் மகன் அழகாக இந்தியில் உரையாடியது என்னை ஆச்சரியப்படுத்திய
ஒரு revealation. நமக்கு தெரியாமலே நம் மக்கள் நம் கண் மறைவில் மிக
அழகாக வளர்ந்துவிடுகிறார்கள். என் தாத்தாக்கள் இந்தி பேசியது அவர்கள்
ராணுவ வீரர்கள் என்பதினால். என் தந்தை ஒரு விமானப்படை அதிகாரி.
என் சித்தப்பா, மாமாக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களே. ஆனால்
அவர்கள் எங்களிடம் இந்தி பேசியதில்லை. நான் ஒரு மத்திய அரசு
மருத்துவக் கல்லூரியில் பயின்றதால் இந்தி ஓட்டையாய் பேசுவேன்.
என் மனைவி இந்தி பயின்றவள். ஆனால் என் மகனோ தமிழக மருத்துவக்
கல்லூரியில் பயின்றவன்.அதனால்தான் இந்த ஆச்சரியம்.
நிற்க, மணீஷோ எங்களுடன் சரளமாக உரையாடமுடிகிறதென்றும்,
south Indian என்றதும் மொழிப்பிறச்சனை இருக்கும் என நினைத்ததாகவும்
எங்களால் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் எனவும் கூறினார்